எச்.எஸ்.பி.சி. வங்கியில் இந்தியர்கள் தரப்பில் ரூ.4479 கோடி கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய மிகப்பெரிய வெளிப்பாடாக எச்.எஸ்.பி.சி. பட்டியலில் ரூ.4,479 கோடிக்கு பணம் இருக்கும் தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வருமான வரித்துறை இந்த கணக்கு வைத்திருப்பவர்களில் 79 பேர் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தவிர, வருமான வரித்துறை மற்றும் அமலாக்க இயக்குனரகம் இந்தியாவுக்குள் கணக்கில் வராத ரூ.14,957.95 கோடி கருப்புப் பணம் பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.